கருணாநிதி அபாய கட்டத்தைத் தாண்டியதாக தகவல்
அபாய கட்டத்தைத் தாண்டினார் கருணாநிதி - ஆ.ராசா
திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஆ.ராசா “ரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியத்திற்கு தலைவர் ஆளானார்.
இங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளார். அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அவரின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்” என்று ஆ.ராசா கூறினார்.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக மருத்துவமனை வெளியிட்டள்ள அறிக்கையிலும், இதே தகவல் இடம் பெற்றுள்ளது.
You'r reading கருணாநிதி அபாய கட்டத்தைத் தாண்டியதாக தகவல் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :