கருணாநிதி தாத்தாவுக்கு... கடிதம் எழுதிய சிறுமி

கருணாநிதிக்கு... கடிதம் எழுதிய சிறுமி

Aug 2, 2018, 23:31 PM IST

தி.மு.க தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி 3ஆம் வகுப்பு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை வாசல்,
பல நெகிழ்ச்சியான காட்சிகளால் நிரம்பி வழிகின்றன. இது ஒரு புறம் இருக்க, சென்னை
பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவி மிஷல் மிராக்ளின் தி.மு.க தலைவர் கருணாநிதி நலம் பெற ஆங்கிலத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "அன்புள்ள டாக்டர் கருணாநிதி தாத்தாவுக்கு, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கேள்விப்பட்டபோது எனக்கு அழுகையாக வந்தது. அன்று இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்."

"நான் பிரார்த்தனை செய்ததால் உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாக மறுநாள்
காலை என் அம்மா சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாகப் பள்ளி சென்றேன்"
என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்கு வந்த மாணவி, தான் எழுதிய கடிதத்தை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். தலைமுறைகள் தாண்டி தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகழ் நிலைத்திருக்கும் என்பதற்கு சிறுமியின் உருக்கமான அன்பு ஓர் சான்றாகும்.

You'r reading கருணாநிதி தாத்தாவுக்கு... கடிதம் எழுதிய சிறுமி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை