மருத்துவமனை அறிக்கை கவலை அளிக்கிறது: தமிழிசை
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து அறிவித்துள்ள காவேரி மருத்துவமனையின் அறிக்கை கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடல் உறுப்புகள் சீராக இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “ திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிக்கிறது. அவர் மீண்டெழுந்து வரவேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது ” என்றார்.
You'r reading மருத்துவமனை அறிக்கை கவலை அளிக்கிறது: தமிழிசை Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :