அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம்

சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் மரணமடைந்தார். தலைவா எழுந்தா வா என்ற கோஷத்துடன் காவேரி மருத்துவமனையை சூழ்ந்திருந்த தொண்டர்களுக்கு கருணாநிதியின் மரணம் மிகவும் அதிர்ச்சியளித்தது. மருத்துவமனை முதல் கோபாலபுரம் வீடு வரையில் தொண்டர்கள் சூழ கருணாநிதியின் உடல் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு, அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல ராஜாஜி ஹாலில் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியை சூழ்ந்தனர்.

நாடு முழுவதிலிருந்தும், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 4 மணியளவில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா கடற்கரை வரையில் வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்துடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கட்சி கொடியுடன் தொண்டர்களின் கோஷம் ஒரு பக்கம், பெண்களின் அழு குரல் ஒரு பக்கம் என குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்ட மக்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.

அடி மேல் அடி வைத்து வந்த இறுதி ஊர்வலம் இறுதியாக அண்ணா நினைவிடத்திற்கு வந்து சேர்ந்தது. இதன்பிறகு, முப்படை வீரர்கள் கருணாநிதியின் உடலை சுமந்தவாறு அடக்கம் செய்யும் இடத்திற்கு தூக்கி வந்தனர். பின்னர், முப்படை தளபதிகளை தொடர்ந்து ராகுல் காந்தி, புதுவை முதல்வர் நாராயண சாமி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அமைச்சர ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குலாம் நபி ஆசாத், தேவ கவுடா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, முப்படை வீரர்கள் மூவர்ண கொடியை மரியாதையுடன் மடித்து மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். மு.க.அழகிரி, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், எம்.பி.,கனிமொழி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கருணாநிதியின் உடல் சந்தன பேழைக்குள் வைத்து இறுதி குடும்பத்தினரால் இறுதி சடங்கு செய்தனர். தொடர்ந்து, 21 குண்டுங்கள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds