டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்
இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்... இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ள மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். மேலும், இதுசம்பந்தமாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 31க்கு தள்ளிவைத்தனர்.
You'r reading டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :