தண்டவாளத்தில் சிமெண்ட் கல்: 3 மாணவர்கள் கைது

வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 
வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு கடந்த 31ஆம் தேதி இரவு பயணிகள் ரயில் புறப்பட்டது. சிறிது நேரத்தில், ரயிலின் அடிப்பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. உடனே,ஓட்டுநர் ரயிலை பாதி வழியில் நிறுத்தி, இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் சிதறி கிடந்தன.
 
இது தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனிடையே, தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
இதனை அடுத்து உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், சிலாபுகள் உடைக்கப்பட்டு அதனுள்ளிருக்கும் கம்பிகள் மட்டும் காணாமல் போனதை கண்டு பிடித்தனர். பணத்திற்காக இரும்பு கம்பிகளை திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
அதன்படி வேளச்சேரி முதல் தரமணியில் உள்ள பழைய இரும்புக் கடைகளில் போலீசார் விசாரணை செய்ததில் இரண்டு சிறுவர்கள் இரும்பு கம்பிகளை கொடுத்து பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
 
விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஐடிஐ மாணவர்கள் என்றும் பிறந்தநாள் விழாவிற்கு நண்பர்களுக்கு ட்ரீட் வைப்பதற்காக பணம் இல்லாததால் இரும்புக் கம்பிகளை திருடியதாக ஒத்துக் கொண்டனர். தண்டவாளத்தில் சிலாபுகளை போட்டு அதன் மீது ரயில் ஏறி சென்ற பிறகு, உடைந்த சிலாபிலிருந்து  கம்பிகளை மட்டும் திருடி பழைய இரும்பு கடையில் விற்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  கைதான 3 சிறுவர்களை  கெல்லீஸ் அரசு சிறார் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds