விசாகா குழுவை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி மனு

Sep 7, 2018, 16:43 PM IST
காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார் அளித்தார். இது சம்பந்தமாக விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் காவல்துறையின் விசாகா குழு அமைத்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். 
 
இந்நிலையில் இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும், சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து,  குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 
 
இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும் இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது. 
 
இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You'r reading விசாகா குழுவை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி மனு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை