800 அரசுப்பள்ளிகளில் உடனடியாக கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

Sep 8, 2018, 13:45 PM IST

800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய பாடத்திட்டத்தல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 3வகையான கணினி பாடபுத்தகம்.  பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், "ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இந்த ஆண்டே, இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வந்துள்ளது. அதாவது, "கணித" பிரிவு மாணவர்களக்கு , "கணினி அறிவியல்' என்ற பாடமும்.  வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

அதே போன்று அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் "கணினி தொழில்நுட்பம்' என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறைக்கு வந்துள்ளது அனைவராலும் வரவேற்க்கதக்கது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன..

பிளஸ் 1 வகுப்பிற்கு கடந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடந்து வருகின்றது.

அவை ஒரு புறம் இருக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு  கணினி ஆசிரியர்கள் பணியிடம் நடைபெற்றது.பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 800 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளது.இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.பாட சுமையும் புதிய பாடத்திட்டத்தில் அதிகம் ..

மாணவர்களின் நலனை கருத்தில்  கொண்டு  நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை  அரசு உடனாடியாக பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற  கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் ,பள்ளிக்கல்வி செயலாளர் ,  இயக்குனர்  அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading 800 அரசுப்பள்ளிகளில் உடனடியாக கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை