குட்கா ஊழல்... குடோனில் சிபிஐ விசாரணை

குட்கா வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வரும் மாதவராவை செங்குன்றத்திலுள்ள குடோனிற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Gudka scam

குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர், விசாரணை சூடு பிடித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், இந்த வழக்கில் கைதான மாதவ்ராவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த இரண்டு நாள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பல அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு லஞ்சமாக கொடுத்த பணம் விவரங்கள் பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை சிபிஐ விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து மாதவ்ராவை சுமார் 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மூன்று கார்களில் செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து விசாரணை செய்ய உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 5 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர்களின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக சிபிஐ சோதனை செய்தனர்.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, பெங்களூர், பாண்டிச்சேரி, குண்டூர், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள 35 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. இதையடுத்து விசாரணை முடிவில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :