கெஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி

தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி

by Rajkumar, Sep 13, 2018, 19:32 PM IST

திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கெஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி யார் எந்த ஊரை சேர்ந்தவர் என என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Baby Advice Mother

திருப்பூர் மண்ணறைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் பிரவீனா தம்பதியரின் ஒரே மகள் ஸ்மித்திகா. இவர் பள்ளிக்கு கொண்டு சென்ற உணவை சாப்பிடாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்ததாக அவரது தாய் பிரவீனா லேசாக அடித்து கேட்டபோது தான் "அடிக்காமல் திட்டாமல் குணமாக சொல்ல வேண்டும்" என ஸ்மித்திகா கூறியுள்ளார்.

அப்போது எடுத்த வீடியோவை சிறுமியின் தந்தையான பிரகாஷின் நண்பர் ஒருவர் சமூக வலைத் தளங்களில் பகிர அனைத்தும் ஊடகங்களிலும் வைரலாகி உள்ளன.

ஸ்மித்திகா மிகவும் குறும்பு செய்யும் பெண் என்பதால் அவளது சுட்டித் தனத்தை வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காண்பித்ததாகவும் அது இவ்வளவு தூரம் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை என ஸ்மித்திகாவின் தாய் பிரவீனா கூறியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் ஸ்மித்திகாவுக்கு பாராட்டுங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாகிய அனைவருக்கும் நன்றி ஸ்மித்திகா கூறியுள்ளார்.

இவருடைய மற்ற சில டிக்டாக், மியூசிக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

You'r reading கெஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை