எடப்பாடி என்னை பார்த்து பயப்படுகிறார்: கருணாஸ் மீது வழக்கு பதிவு

ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை வம்பிழுத்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பாக ராமநாதபுரம் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் இரட்டையிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கருணாஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை கருணாஸ் இருந்த இடமே தெரியாமல் இருந்தது. அவர் மறைந்த பின், இரு அணிகளாக பிரிந்த அதிமுக வின் எந்த அணியில் சேர்வது என்பது குறித்து குழம்பி போனார் கருணாஸ். முதலில் சசிகலா அணியிலும் பின்னர் எடப்பாடி அணியிலும் மாறி மாறி தற்போது எந்த அணியில் உள்ளார் என்பதே ஒரு குழப்பத்தில் நம்மை சிக்கவைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக சார்பாக நடத்தப்பட்ட மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினார் கருணாஸ்.

இந்நிலையில்,கடந்த 16ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை கண்டு பயப்படுவதாக கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், காவல்துறை அதிகாரி ஒருவரை பார்த்து முடிந்தால், நேருக்கு நேர் காக்கிசட்டையில்லாமல் மோதிப்பார்க்குமாரும் சவால் விடுத்துள்ளார். சர்ச்சை பேச்சுக்களையும், ஜாதி ரீதியாகவும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசிய இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவ துவங்கியதும், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதில், தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவர்களை பற்றி அவதூறு பேசியதற்காகவும் இணையதளங்களில் வெளியான காட்சிகளை சாட்சியாக வைத்து 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds