புழல் சிறை கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல்
புழல் சிறையில் மீண்டும் நடத்திய சோதனையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற தீவிர சோதனையில், தொலைக்காட்சிகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புழல் மத்திய சிறையில் இன்று மீண்டும் நான்காவது முறையாக சோதனை நடத்தப்பட்டது. இதில், சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஐயப்பன் என்ற கைதி உள்பட 2 கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புழல் சிறையில், கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, புழல் உள்பட தமிழக சிறைகளில் போலீஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You'r reading புழல் சிறை கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News