ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிப்பா?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் காலநீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

Arumugasamy Commission

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான அரசாணையும் 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

முதலாவதாக மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில் மேலும் ஆறுமாதம், அதன் பின் நான்கு மாதம் என கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியது.

அதன் அடிப்படையில் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது வரை 103 பேரிடம் விசாரணையை நடத்தி முடித்திருக்கிறார். இதில் பல பேரிடம் மறுவிசாரணையும் நடைபெற்றுள்ளது.

மேலும், 50க்கும் மேற்பட்டோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையையும் செய்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் இரண்டாவதாக வழங்கப்பட்ட நான்கு மாத கால நீட்டிப்பானது வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்ளாக விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்ற அடிப்படையில் விசாரணையை ஆணையம் தீவிரமாக நடத்தி வந்தது.

இருப்பினும் இன்னும் பல பேரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட பலரை விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் கால நீட்டிப்பு முடிவடையும் நிலையில் மேலும் மூன்று காலத்திற்கு அரசிடம் கால நீட்டிப்பு கேட்கலாம் என ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், அதற்கான கோரிக்கை கடிதத்தை விரைவில் ஆணையம் அரசுக்கு அனுப்ப உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds