கபாலீஸ்வரர் கோயில் சிலை- அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவின் போது, புன்னைவனநாதர், ராகு, கேது மூன்று சிலைகள் மாற்றப்பட்டதாகவும், அவை கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் ஸ்தபதி முத்தையா ஆகியோரிடம் மயிலாப்பூர் கோயிலில் வைத்து விசாரணை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை வியாசர்பாடியில் உள்ள, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் விசாரணை நடைபெற்றது. டி.எஸ்.பி குமார் தலைமையில், ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு விசாரணை செய்தது. முதல் முறையாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரிக்கப்படுபவர் பெண் என்பதால் சட்டப்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds