தமிழகத்திலும் காலூன்றிய பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணி பெண் உள்பட இருவர் பலி

நாகர்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சல் காலூன்றத் தொடங்கி வேகமாக பரவி வருகிறது. இந்தாண்டு மட்டும் அக்டோபர் 7ம் தேதி நிலவரப்படி, 232 பேர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குணவீதி நர்சலேன் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை திரேசா ஜோசப்பின் ராணி (60), பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்ட்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜோசப்பின் ராணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், அதே வார்டில் அஸ்வதி என்ற ஒரு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன் (32). இவரது, மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு, 3 வயதில் குழந்தை உற்றது.

9 மாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தி மாதிரி பரிசோதனை செய்ததில், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகன்யா அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுகன்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds