டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: புள்ளியியல் விரிவுரையாளர் வேலைவாய்ப்பு
TNPSC Applications are invited for statistics lecture 2018
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் காலியாக உள்ள புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 11.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
- வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்
- காலிப் பணியிடம் : 03
- கல்வித் தகுதி :- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(*தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். )
- வயது வரம்பு:- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.) - சம்பளம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
- தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12
- தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
- தேர்வுக் கட்டணம் : ரூ.200. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11
மேலும் விபரங்ககளுக்கு மற்றும் விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
You'r reading டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: புள்ளியியல் விரிவுரையாளர் வேலைவாய்ப்பு Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News