டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: புள்ளியியல் விரிவுரையாளர் வேலைவாய்ப்பு

TNPSC Applications are invited for statistics lecture 2018

by Manjula, Oct 23, 2018, 15:35 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் காலியாக உள்ள புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 11.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

  • வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்
  • காலிப் பணியிடம் : 03
  • கல்வித் தகுதி :- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(*தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். )
  • வயது வரம்பு:- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
    (அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.)
  • சம்பளம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
  • தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12
  • தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
  • தேர்வுக் கட்டணம் : ரூ.200. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11

மேலும் விபரங்ககளுக்கு மற்றும் விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

You'r reading டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: புள்ளியியல் விரிவுரையாளர் வேலைவாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை