பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும்: முதல்வர் அழைப்பு

TN CM Edappadi Pazhanisamy invites separatists rejoin most

by Isaivaani, Oct 27, 2018, 19:22 PM IST

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைவிடுத்துள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த 18 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சபாநாயகர் தனபால் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். சபநாயகரின் உத்தரவு செல்லும் எனக்கூறி 18 பேரின் எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பிரிந்து சென்ற அனைவரும் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கையின் மூலம் அழைப்புவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்ததை உணர்ந்து, சிலரின் தவறான வழிநடத்தலால் மாற்றுப் பாதையில் சென்றவர்கள் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவாக்கிய மகத்தான இயக்கத்தில் மீண்டும் இணைய வேண்டும். நீர் அடித்து, நீர் விலகுவதில்லை என்பது முப்பெரும் தமிழ் பழமொழி. சிறுசிறு மனகசப்புகள், எண்ண வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இணைய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

You'r reading பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும்: முதல்வர் அழைப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை