தினகரன் பெற்ற வெற்றி இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமானது... கமலஹாசன் கடும் கண்டனம்.

பணம் பெற்று வாக்களிப்பது என்பது பிச்சை பெறுவது போன்றது

by Isaivaani, Jan 4, 2018, 18:37 PM IST
கமலஹாசன் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக நடப்பு அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார், ஓக்கி புயலிலுக்கு பிறகு அவரது குரல் கேட்காமலேயே இருந்தது.
 
 
தற்போது, மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார். 
பிரபல வார இதழில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் பெற்றி பெற்றார்,
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கமலஹாசன்,
ஆர்.கே.நகர் மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போய்விட்டதாகவும், பணம் பெற்று வாக்களிப்பது என்பது பிச்சை பெறுவது போன்றது எனவும், அதுவும் ஒரு திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாகி போனார்கள் என்றும், இது தமக்கு சோகத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து சுமார் பத்து நாட்கள் கழித்து, திடீரென அதுபற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தினகரன் பெற்ற வெற்றி இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமானது... கமலஹாசன் கடும் கண்டனம். Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை