பயணிக்க தயாராகுங்க மக்களே.. மார்ச் முதல் நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவை

by Isaivaani, Jan 5, 2018, 09:03 AM IST

சென்னை: நேரு பூங்கா-சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில், பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட கோயம்பேடு-ஆலந்தூர், மீனம்பாக்கம்-நேரு பூங்கா உள்ளிட்ட வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேரு பூங்கா&சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நிறைவு அடைந்துள்ளது. இதனால், வரும் மார்ச் மாதம் முதல் நேரு பூங்கா&சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, சர் தியாகராய கல்லூரி, கவுரி ஆஸ்ரம், தங்கல், சுங்கச்சாவடி, திருவொற்றியூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது தரைத்தளம், படிக்கட்டுகளில் கற்கள் பதிப்பது, மின்னணு கருவிகள் பொருத்துவது போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

சுரங்கப்பாதையில் நேரு பூங்கா-சென்டிரல் எழும்பூர் வழியாக உள்ள பாதையில் வரும் மார்ச் மாதம் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பாதையில் தண்டவாளம், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது.
இந்தப் பாதையில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான பாதையில் மெட்ரோ ரயில் சோவை தொடங்கி விடுவோம். வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் பாதையில் அடுத்த ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

You'r reading பயணிக்க தயாராகுங்க மக்களே.. மார்ச் முதல் நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை