தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்க கடும் எதிர்ப்பு

சென்னை: பேருந்து ஸ்டிரைக்கை தொடர்ந்து, தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்தை இயக்க முதல்வர் எடுத்திருக்கும் முடிவுக்கு வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிமனைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, திமுக உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஓட்டுனர்களும், கன்டக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், ஓட்டுவதற்கு ஓட்டுனர் இல்லாமல் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், தினக்கூலி அடிப்படையில், தற்காலிக ஓட்டுனர், கண்டக்டர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்குவதற்கும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை தலைமை பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், அனைத்து பணிமனைகளிலும் தற்காலிக ஓட்டுனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds