அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 100 பேர் மீது வழக்குப்பதிவு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்த சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டியை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு, பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்தனர்.

இந்நிலையில், பல மாவட்டங்களில் தீபாவளி முன்னிட்டு நள்ளிரவு முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, நெல்லை சேரன்மாதேவியில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைதுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட சிறுவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 6 சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் 7 இளைஞர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 தடையை மீறி செயல்படுதல், 285 அரசாணையை மீறி செயல்படுதல், 291 பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேர் மீதும், திருப்பூர் மாவட்டத்தில் 42 பேர் மீதும், விழுப்புரம் மாவட்டத்தில் 29 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds