கஜா புயல் நிவாரண பணிகளுக்கு திமுக ரூ1 கோடி நிதி

DMK announces Rs 1 crore relief fund

by Mathivanan, Nov 19, 2018, 15:28 PM IST

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சார்பில் அவர்களின் ஒரு மாத ஊதியம் நிதியாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

You'r reading கஜா புயல் நிவாரண பணிகளுக்கு திமுக ரூ1 கோடி நிதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை