எடப்பாடி பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ மன்னன்... ஸ்டாலின் காட்டம்
DMK President Stalin slams CM Edappdi Palanisamy
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடாததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்’. நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்.
கோரப் புயல் பாதித்து 72 மணி நேரத்தை கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம், பாட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்திற்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்!
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
You'r reading எடப்பாடி பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ மன்னன்... ஸ்டாலின் காட்டம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News