நிவாரண உதவி அறிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் பதுங்கி பதுங்கி பீதியுடன் வலம் வரும் தினகரன்! Exclusive

நாகையில் அமைச்சர் ஓ.எஸ் மணியனை கத்தியால் குத்த முயன்ற இளைஞரால் பரபரப்பு!


வேதாரண்யம் பகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன். ‘ எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்’ என தினகரன் கூறினாலும், ‘கட்சி நிர்வாகிகள்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தினகரனால் எந்த லாபமும் இல்லை’ என கொதிக்கின்றனர் அமமுக தொண்டர்கள்.

காவிரி டெல்டா பகுதிகளை குறிவைத்து தினகரன் அரசியல் செய்து வந்தாலும், புயலால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம் ஆகியோருக்குக் கிடைத்த ‘வரவேற்புகள்’ ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல, தினகரன் தரப்பினருக்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுதான் பிரதான காரணம்.

எதிர்க்கட்சியான தி.மு.க, புயல் பாதித்த பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளையில் இருந்தும் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது திமுக.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு ரூபாயைக்கூட நிவாரணமாக தினகரன் அறிவிக்கவில்லை. இது அமமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக பேசும் தினகரன் கட்சி நிர்வாகிகள், ‘ அமமுகவில் சேர்ந்தது முதல் இப்போது வரையில் நாங்கள்தான் செலவு செய்து வருகிறோம். பொதுக்கூட்டம் உள்பட எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தினகரனிடம் பணத்தை எதிர்பார்க்க முடியாது.

டெல்டா பகுதிகளில் பத்து லட்சம் செலவு செய்து கூட்டம் போடுவோம். தினகரன் தரப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாயைக் கொடுப்பார்கள். இவ்வளவு செலவு செய்த பிறகு அவர் கொடுக்கும் அந்த ஒரு லட்சத்தை வாங்கினால் மரியாதையாக இருக்காது என அந்தப் பணத்தையும் மறுத்துவிடுவோம்.

தற்போது கஜா புயலால் கொடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது காவிரி டெல்டா.

இந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள். இந்த மக்களுக்காக நேரடியாகக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டி.டி.வி.

ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே ஆய்வு நடத்துகிறார். கேட்டால், ஒரத்தநாட்டில் சிக்கிக் கொண்டார், இந்தப் பாதை வழியாக வர முடியவில்லை எனச் சொல்கின்றனர். இதையெல்லாம் ஏற்கும்படியாக இல்லை. ‘வைத்திக்கும் மணியனுக்கும் கிடைக்கும் வரவேற்பு தனக்கும் வந்துவிடக் கூடாது’ என்ற அச்சம்தான் காரணம்.

இந்த நிமிடம் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் அவர் எந்த உதவிகளும் செய்யவில்லை. பொருளாதாரரீதியாக சிரமத்தில் இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிகுந்த வசதியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களால் கட்சிக்காரர்களுக்கும் லாபமில்லை. மக்களுக்கும் லாபமில்லை’ என்கின்றனர்.

- அருள் திலீபன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds