விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாட்டம்
Tamils celebrate Prabhakaran birth day
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டை தூய்மை சென்ற 4 இளைஞர்களை போலீசார் விரட்டியடித்துள்ளனர்.
வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார். தமிழகத்திலும் பல இடங்களில் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். சென்னை மேடவாக்கம் திருவள்ளுவர் மழலையர் தொடக்கப் பள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகம், கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் பிராபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நடிகர் சத்யராஜ், தமிழர் விடுதலை கழகத்தின் பொழிலன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தான முகாம் நடத்தினர். மதுரையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
தமது ட்விட்டர் பக்கத்தில் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சதீஸ். மேலும் வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரன் வீடு முன்பாக எடுத்த புகைப்படத்தையும் சதீஷ் பகிர்ந்துள்ளார். இதேபோல் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் பிரபாகரன் பிறந்த் நாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
You'r reading விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News