தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், அரசியலில் தனது அடுத்த நகர்வு குறித்தும் நாளை [புதன்கிழமை] அறிவிப்பேன் என்று ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் கூறி உள்ளார்.

Jan 16, 2018, 13:26 PM IST

தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், அரசியலில் தனது அடுத்த நகர்வு குறித்தும் நாளை [புதன்கிழமை] அறிவிப்பேன் என்று ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் கூறி உள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ”எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் தேதி, தமது அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து அறிவிப்பேன்.

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. அது எப்போது முடியும் என்று தெரியாது. ஆனால், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இப்படியான சூழ்நிலையில் சில முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது." என்றார்.

மேலும், 90 சதவிகித தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளதாகவும் கூறினார். "இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரிடம் (சசிகலா) விவாதித்தேன், அவர், `நீயே நல்ல முடிவா எடு` என்று கூறினார்" என்று தெரிவித்தார்.

You'r reading தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை