மின்னியாபோலிஸ் நகரில் அதிகரிக்கும் கொள்ளைகள்..20 பேர் கைது.. அமெரிக்காவிலும் இப்படித்தான்

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னேசோட்டா மாகாணத்தில் பெரிய நகரம் மின்னியாபோலிஸ். இங்கு தனியாக செல்பவர்களை அடித்து உதைத்து செல்போன், பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் விவரம் தெரியாமல் தனியாக செல்லும் போது இந்த இளம் கொள்ளையர்களிடம் சிக்கி விடுகிறார்கள்.

கொள்ளை சம்பவங்களை நேரில் பார்த்த ஸ்நேகா பாக்டா கூறுகையில், நான் தினமும் காலையில் தனியாகவே நடந்து செல்வேன். இப்போதெல்லாம் அப்படி செல்வதற்கு பயப்பட வேண்டியுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி காலையில் ஹென்னேபின் அவின்யூக்கும், 5வது தெருவுக்கும் இடையே உள்ள சந்திப்பில் ஒருவர் தனது செல்போனை பார்த்து கொண்டே நடந்தார். திடீரென நான்கைந்து இளைஞர்கள் அவரிடம் சென்று பேசினர். ஒரு சில வினாடிகளில் அவரை சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்து தாக்கினர். அவர் சுருண்டு கீழே விழுந்த போதும் அவர் மீது ஏறி மிதித்து குரூரமாக தாக்கி விட்டு, அவரது செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டு ஓடினர்.

இதே போல், டார்கெட் பீல்டு பகுதியில் ஒருவரை தாக்கியதை பார்த்தேன். தாக்குதலில் கீழே விழுந்த அவர் மீது பைக்கை ஏற்றினர். இந்த காட்சிகள், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கின்றன. இப்போது போலீசார் அவர்களை பிடித்து வருகின்றனர் என்றார்.
மின்னியாபோலிஸ் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 48 வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் ஒரே வாரத்தில் 23 தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இப்போது போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். அனைவருமே 18 முதல் 27 வயது இளம் குற்றவாளிகள். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் 156 வழிப்பறிக் கொள்ளைகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு அதே காலத்தில் 240 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, மேட் டாட்ஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் வி.ஜே.சுமித் கூறுகையில், வீட்டில் சண்டை போட்டு கொண்டு வெளியேறும் இளைஞர்கள்தான் இப்படி குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்களிடம் விசாரித்து திருத்த வேண்டியுள்ளது. அவர்கள் ஏன் படிக்கச் செல்லவில்லை? மனரீதியாக ஏன் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை அறிந்து அதற்கேற்ப மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds