பலமான ராணுவம் இருந்தாலும் போரை விரும்பவில்லை.. அமெரிக்க அதிபர் பேச்சு

உலகிலேயே அமெரிக்கா பலம் பொருந்திய ராணுவத்தைக் கொண்டிருந்தாலும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.


இதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது 15 ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது.


இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். ஈராக்கில் 2 இடங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும் என்றும் இது உலகப் போராக கூட மாறலாம் என்றும் பலவாறாக பேச்சுகள் அடிபட்டன.


இந்நிலையில், அதிபர் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அமெரிக்க வீரர்கள் யாரும் இறக்கவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தாக்குதலில் குறைந்த அளவு சேதம்தான் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஈரான் தளபதி சொலெய்மணி, அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த குறிவைத்திருந்தார். பயங்கரவாதிகளை ஊக்குவித்தார். ஆனால், இப்போது ஈரான் நிலைகுலைந்து போயிருப்பது தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நல்லது. குறிப்பாக உலக நாடுகளுக்கு மிகவும் நல்லது.


அமெரிக்கா உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவப் படைகளையும், கருவிகளையும் கொண்டிருக்கிறது. ஆனால், அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். ஈரான் நாட்டுடன் 2015ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து 2018ல் நாங்கள் விலகி விட்டோம். மற்ற நாடுகளும் விலகி, புதிய ஒப்பந்த்தை போட வேண்டும். நான் அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுக்க விட மாட்டேன். ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள், இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :