2 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் விடுவிப்பு.. செனட் தீர்மானம் தோல்வி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஜோ பிடனும், அவரது மகனும் சேர்ந்து உக்ரைனில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தின் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து விசாரிக்குமாறு உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஜோ பிடன் மீது இப்போதே ஊழல் கறையை படிய வைப்பதன் மூலம் தனக்கு தேர்தலில் சாதகம் ஏற்படும் என்று டிரம்ப் இப்படி செய்ததாக கூறப்பட்டது. இது குற்றச்சாட்டு, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை நடைபெறாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கொண்டு வந்தனர். கடந்த டிசம்பரில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து செனட் சபையில் இத்தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நேற்று(பிப்.5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட தீர்மானத்திற்கு டிரம்ப்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், டிரம்ப்புக்கு எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக 66 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அதனால், அந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டாவது குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பில் டிரம்ப்புக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இந்த குற்றச்சாட்டில் இருந்தும் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.
மொத்தம் 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில் குடியரசுக் கட்சியின் 20 உறுப்பினர்களாவது டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும்.
முன்னதாக, விவாதத்திற்கு டிரம்ப் பதிலுரை ஆற்றும் போது, சபாநாயகர் நான்சி பெலோசியிடம் உரை நகலை அளித்தார். அப்போது அவரிடம் பெலோசி கைகுலுக்க கையை நீட்டினார். அதை உதாசீனப்படுத்தி விட்டு உரையாற்றினார் டிரம்ப். இதற்கு பதிலடியாக, டிரம்ப் பேசி முடித்ததும் அந்த உரையை கிழித்தெறிந்தார் நான்சி பெலோசி. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds