22 மாதங்களுக்கு பிறகு பாலகோட்டில் தீவிரவாத பயிற்சி.. அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்!

by Sasitharan, Dec 12, 2020, 21:30 PM IST

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் மறக்க முடியாத தாக்குதல் பதான்கோட் தாக்குதல். ஜெயிஷ்-இ-முகம்மது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. தற்போது அதே போன்று ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் முனைப்பாக உள்ளன என்றும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இதற்காக, தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி முகாம்களை தொடங்கியுள்ளது என்றும் தகவல் வெளியாகியது.

இப்போது இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய அதே பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீண்டும், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அப்துல் ரவுப் அசார் தலைமையில் செயல்பட துவங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சிகள் தொடங்கியுள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading 22 மாதங்களுக்கு பிறகு பாலகோட்டில் தீவிரவாத பயிற்சி.. அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை