இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை.. தன் சொந்த கையாலேயே நேர்ந்த சோகம்!

by Sasitharan, Apr 12, 2021, 20:45 PM IST

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இரண்டு நாட்களுக்குமுன் காலமானார். தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இவரின் உடல் வரும் 17ம் தேதி உரிய இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட. இருக்கிறது. இறுதி ஊர்வலத்திற்காக இளவரசர் பிலிப் தன் சொந்த கையாலேயே வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் சொகுசு ரக கார் தயார்படுத்தப்பட்டு உள்ளது. கார் பிரியரான இளவரசர் பிலிப் 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் காரை அவர் மறுவடிவமைத்துடன், இதில் தான் இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என்று கூறியிருந்தாராம். அதன்படி தற்போது நடக்க இருக்கிறது.

மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர். வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.

பிலிப், கடந்த பிப்ரவரி 6-ந்தேதி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை.. தன் சொந்த கையாலேயே நேர்ந்த சோகம்! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை