“நான் மணமகளின் தோழியல்ல” - பிரியங்கா சோப்ரா
நான் மணமகளின் தோழியல்ல
மே 19-ஆம் தேதி, இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேக்ஹான் மார்க்லே திருமணம் நடைபெற உள்ளது. மேக்ஹான், பிரியங்கா சோப்ராவை தன் இனிய தோழி என்று கூறியிருக்கிறார்.
மேக்ஹான் - ஹாரி திருமணத்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, “இந்த திருமணத்தை குறித்து கேள்விப்பட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேக்ஹான் உங்களையும் என்னையும் போல இந்த உலகை குறித்து அக்கறை கொண்ட ஓர் அழகிய இளம்பெண். ஆகவே, நான் அவரை அதிகம் நேசிக்கிறேன்.
மேக்ஹானுக்கும் ஹாரிக்கும் மட்டுமல்ல, ஆற்றல்மிக்க பெண்களை அடையாளங்களாக காணும் வண்ணம் மொத்த உலகிற்குமே இந்த திருமணம், ஒரு திருப்புமுனை அனுபவமாக அமையும். ஆனால், பிரிட்டன் அரச குடும்ப திருமணத்தில் நான் மணப்பெண்ணின் தோழியல்ல" என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading “நான் மணமகளின் தோழியல்ல” - பிரியங்கா சோப்ரா Originally posted on The Subeditor Tamil
More World News