Oct 18, 2020, 10:04 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கூலி ஆட்களை வைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். கூலி ஆட்களை கைது செய்த போலீசார், சாமியாரின் நாடகத்தை கண்டுபிடித்தனர். Read More
Oct 18, 2020, 09:14 AM IST
ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கவுண்டர் பாயிண்ட் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் முதலிடத்தை சாம்சங் மீண்டும் கைப்பற்றியுள்ளது. Read More
Oct 17, 2020, 18:22 PM IST
சமூக ஊடக வீடியோ தளமான யூடியூப்பில் பெரிய அளவில் போலி செய்திகளைப் பரப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறி 3,000 போலி யூடியூப் சேனல்களை அகற்றியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Oct 17, 2020, 18:10 PM IST
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். Read More
Oct 17, 2020, 16:49 PM IST
சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது பொது முடக்கத்தால் மக்களில் பலர் வருவாய் இழந்து வங்கிக் கடன்களுக்குத் தவணை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. Read More
Oct 17, 2020, 16:26 PM IST
உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தியைப் பேருக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Oct 17, 2020, 16:18 PM IST
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்குப் பிறகு இதனைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 21 இலட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. Read More
Oct 17, 2020, 16:13 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு இந்த மாநிலங்களுக்கு விரைகிறது Read More
Oct 17, 2020, 14:50 PM IST
தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 17, 2020, 13:30 PM IST
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ல் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசும் எவ்வளவு போராடியும் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. Read More