Jul 25, 2019, 11:11 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Jul 25, 2019, 10:27 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டார். ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். Read More
Jul 25, 2019, 10:21 AM IST
கர்நாடக அரசியலில் 2 வாரங்களுக்கும் மேலாக வீசிய சூறாவளி குமாரசாமி அரசை காவு வாங்கி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமைதி காக்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஆட்சியமைக்க உரிமை கோரும் முடிவில் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 24, 2019, 18:22 PM IST
‘சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். Read More
Jul 24, 2019, 18:08 PM IST
சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கும், தமிழ்நாடு உள்பட 5 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jul 24, 2019, 14:22 PM IST
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Jul 24, 2019, 13:03 PM IST
கர்நாடகாவில் கால்நடைகள் ஏலத்தை பாஜக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். Read More
Jul 24, 2019, 10:07 AM IST
எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Jul 24, 2019, 09:38 AM IST
கர்நாடக மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 72 ஆண்டுகளில் 32 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்துள்ளனர். தற்போது 4-வது முறையாக முதல்வராகப் போகும் பாஜகவின் எடியூரப்பாவின் கதை தான் மிகவும் சோகமானது. முதல் முறை முதல்வராக 7 நாட்களும், அடுத்த முறை 3 ஆண்டுகளும், கடைசியாக 2 1/2 நாட்களும் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார். Read More