Aug 14, 2019, 12:23 PM IST
காஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். Read More
Aug 14, 2019, 09:44 AM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர். Read More
Aug 13, 2019, 19:18 PM IST
குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்? Read More
Aug 13, 2019, 12:50 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 13, 2019, 12:40 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, பவுன் ரூ.28,896 என்ற விலைக்கு விற்கிறது. Read More
Aug 13, 2019, 11:58 AM IST
நெல்லை அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பண்ணை வீட்டிற்குள் இரவு நேரத்தில் அரிவாள்களுடன் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர், செருப்பு.. சேர்.. கட்டை.. என கையில் கிடைத்த பொருட்களை கொண்டே தைரியமாக அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீர, தீரத்துடன் போராடிய அந்தத் தம்பதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. Read More
Aug 12, 2019, 13:22 PM IST
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 9, 2019, 15:34 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடும் இழுபறிக்குப் பின் 7734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கோட்டை எட்டினார் கதிர் ஆனந்த்.நோட்டா பெற்ற 9292 வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். Read More