May 24, 2019, 12:16 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கொங்கு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சி சார்பில் சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது: Read More
May 24, 2019, 10:02 AM IST
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலாக சந்தித்தது இந்த நாடாளுமன்றத் தேர்தலைத்தான். இதில் தி.மு.க. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஸ்டாலின் பெரிய சாதனை படைத்திருக்கிறார் Read More
May 24, 2019, 08:47 AM IST
மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமே 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசால் கடந்த தேர்தலைப் போல், இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
May 23, 2019, 13:08 PM IST
சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் எப்படி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன Read More
May 23, 2019, 13:05 PM IST
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக மாற்று சக்தியாக உருவெடுப்பார் டிடிவி தினகரன் என்ற ஒரு தோற்றத்தை அமமுக ஏற்படுத்தியது. ஆனால் பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்று தினகரனின் கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது Read More
May 23, 2019, 07:43 AM IST
மத்தியில் அரியணையில் அமரப்போவது யார்? என்பதற்கான விடை தெரியும் நாள் தான் இன்று .பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? இல்லை கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமருமா? என்பதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கியுள்ளது. Read More
May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More
May 22, 2019, 10:30 AM IST
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள், மொத்தம் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன Read More
May 21, 2019, 12:12 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது Read More
May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More