Aug 15, 2019, 12:09 PM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். Read More
Aug 15, 2019, 12:02 PM IST
காஷ்மீர் மகாராஜாவின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவியது. ஆனால், அது மகாராஜாவின் பேத்தி அல்ல என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. Read More
Aug 15, 2019, 11:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More
Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More
Aug 15, 2019, 09:46 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டி20 போட்டி போல் விஸ்வரூபம் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. Read More
Aug 15, 2019, 09:37 AM IST
அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். Read More
Aug 14, 2019, 22:48 PM IST
நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம். Read More
Aug 14, 2019, 22:41 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். Read More
Aug 14, 2019, 19:07 PM IST
சமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. Read More
Aug 14, 2019, 14:01 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. Read More