Aug 5, 2019, 14:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More
Aug 5, 2019, 13:39 PM IST
ஜம்மு& காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கும் மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. Read More
Aug 5, 2019, 13:10 PM IST
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 4, 2019, 12:44 PM IST
ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது. Read More
Aug 3, 2019, 16:14 PM IST
‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More
Aug 3, 2019, 13:36 PM IST
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
Aug 2, 2019, 18:09 PM IST
காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து, உடனடியாக வெளியேற வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் அதிக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 2, 2019, 13:31 PM IST
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More