May 13, 2019, 09:19 AM IST
ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாக வரும் 21-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மம்தாவும் மாயாவதியும் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் இருவரும் உள்ளதே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
May 13, 2019, 00:01 AM IST
ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. Read More
May 12, 2019, 21:28 PM IST
ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது Read More
May 12, 2019, 13:57 PM IST
இந்தாண்டின் ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவை என்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லப் போவது யார் என்ற போட்டா போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
May 12, 2019, 12:22 PM IST
இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார். Read More
May 11, 2019, 13:10 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ரகளை செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முன் எச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் புகார் வாசித்துள்ளார் Read More
May 11, 2019, 12:45 PM IST
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன்படி ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வந்தது Read More
May 11, 2019, 12:17 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார் Read More
May 11, 2019, 11:38 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார் Read More
May 11, 2019, 11:25 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது Read More