Aug 8, 2019, 14:13 PM IST
காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். Read More
Aug 8, 2019, 11:00 AM IST
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தனது கட்சியைச் சேர்ந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 8, 2019, 10:12 AM IST
அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சரமாரியாக விமர்சித்ததுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் வாசித்ததே, அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பகிரங்கமாக குற்றம் சாட்டி பேட்டி அளித்த 10 மணி நேரத்திலேயே மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, இரண்டரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 7, 2019, 21:02 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 7, 2019, 20:12 PM IST
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More
Aug 7, 2019, 18:55 PM IST
காஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை அஜித்தோவல் சந்தித்து பேசினார். பின்னர், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். Read More
Aug 7, 2019, 18:32 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. Read More
Aug 7, 2019, 14:14 PM IST
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். Read More
Aug 7, 2019, 13:13 PM IST
கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 7, 2019, 12:00 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More