Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 24, 2019, 09:38 AM IST
கர்நாடக மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 72 ஆண்டுகளில் 32 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்துள்ளனர். தற்போது 4-வது முறையாக முதல்வராகப் போகும் பாஜகவின் எடியூரப்பாவின் கதை தான் மிகவும் சோகமானது. முதல் முறை முதல்வராக 7 நாட்களும், அடுத்த முறை 3 ஆண்டுகளும், கடைசியாக 2 1/2 நாட்களும் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார். Read More
Jul 17, 2019, 14:55 PM IST
பீகாரைச் சேர்ந்த சிறுவன் தனது அப்பா, அம்மா சண்ைடயை தாங்க முடியாமல், சாக அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 16, 2019, 14:39 PM IST
‘நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்கள் யார், யார்? இன்றே பட்டியல் கொடுங்கள்...’’ என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. Read More
Jul 13, 2019, 10:23 AM IST
கோவாவில் 4 அமைச்சர்களை கழட்டி விட்டு, காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார் அம்மாநில பாஜக முதலமைச்சர் பிரமோத் சவந்த். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று மாலை நடக்கிறது. Read More
Jul 3, 2019, 10:02 AM IST
அமைச்சர் பதவியும் தராமல், தனது கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி மீது சுப்பிரமணிய சாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார். Read More
Jun 26, 2019, 10:54 AM IST
சென்னை எழும்பூரில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More
Jun 24, 2019, 11:17 AM IST
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பங்கேற்ற ஏராளமானோர், குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கமிட்டனர். Read More
Jun 22, 2019, 14:11 PM IST
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது Read More
Jun 22, 2019, 11:35 AM IST
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும் என மழை வேண்டி அதிமுக சார்பில் பல்வேறு கோயில்களில் யாக பூஜை நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பயபக்தியுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். Read More