Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Jun 2, 2019, 12:57 PM IST
பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Jun 1, 2019, 12:57 PM IST
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது Read More
Jun 1, 2019, 09:33 AM IST
பிரதாப் சந்திர சாரங்கி.. 64 வயது பிரம்மச்சாரியான இவரை இன்று நாடே தலையில் தூக்கி வைத்து ஆஹா... ஓஹோ..வென கொண்டாடி வருகிறது. ஒரே ஒரு குடிசை வீடு.. ஒரே ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரர் .பரம ஏழை , கல்யாணமே செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் புகழப்படும் இந்த சாரங்கி இப்போது மத்திய அமைச்சராகி விட்டதால் தான் இவ்வாறெல்லாம் புகழப்படுகிறார். ஆனால் இவருடைய கிரிமினல் பின்னணி பற்றி ஆராய்ந்தால் பல திடுக் தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புகிறது Read More
May 31, 2019, 20:31 PM IST
தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More
May 28, 2019, 09:21 AM IST
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 26, 2019, 14:08 PM IST
ஆந்திராவில் தேர்தலில் வென்று எம்.பி.யாகி விட்ட இன்ஸ்பெக்டருக்கு அவரது பழைய டி.எஸ்.பி. சல்யூட் அடித்த காட்சி, யூ-டியூப்பில் வைரலாக பரவி வருகிறது. Read More
May 25, 2019, 12:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது Read More
May 24, 2019, 13:31 PM IST
கட்சி ஆரம்பித்த 16 மாத காலத்தில், சந்தித்த முதல் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். நல்ல வழியில் பயணத்தை தொடர்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகமாக தெரிவித்துள்ளார் Read More