Sep 5, 2020, 11:23 AM IST
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Sep 5, 2020, 11:06 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது இன்றும் சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,879 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 9 ஏற்றம் கண்டு கிராமானது 4888க்கு விற்பனையாகிறது. Read More
Sep 5, 2020, 10:45 AM IST
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் எத்தனை நாள்கள் எதிர் உயிரி இருக்கும் என்ற ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களைப் பற்றிய ஓர் ஆய்வினை புது டெல்லியிலுள்ள மாக்ஸ் மருத்துவமனையும் அறிவியல் தொழில் ஆய்வு கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து நடத்தின. Read More
Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Sep 5, 2020, 10:24 AM IST
நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி மற்றும் பப்பி, வாட்ச்மேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் நேற்று பெங்களூரூவில் உள்ள ஒரு பார்க்கில் ரோப் எனப்படும் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுழன்று நடனம் ஆடும் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். Read More
Sep 5, 2020, 10:12 AM IST
நடிகனால் நாடாளமுடியும் என்பதைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நிரூபித்தார். அவரை தொடர்ந்து ஹீரோவாக நடிப்பவர்கள் ரசிகர் கூட்டம் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வர எண்ணுகிறார்கள் அல்லது ரசிகர்களே அவர்களை அரசியலில் குதிக்க அழைக்கிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர அழைத்து அவரது ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர். Read More
Sep 5, 2020, 09:29 AM IST
ரஷ்யாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் விய் பென்ஹியை சந்தித்துப் பேசினார்.ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத்சிங் சென்றுள்ளார். Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Sep 5, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More