Apr 2, 2019, 10:43 AM IST
எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயில் இப்போது கொளுத்துகிறது. வெயிலை விட எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களம் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இதில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கிறேன் பேர்வழி என்று மகா பொது ஜன வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் அமர வைப்பது தான் இந்தத் தேர்தலில் பெரும் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. Read More
Apr 2, 2019, 09:17 AM IST
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.மக்களவை மற்றும் இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. Read More
Apr 2, 2019, 07:57 AM IST
கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார். Read More
Apr 1, 2019, 22:01 PM IST
வருமான வரி சோதனை என்பது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக் கணக்கு .என்னைக் குறி வைத்தால் ஒட்டுமொத்த திமுகவினரை அச்சுறுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Apr 1, 2019, 18:45 PM IST
தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் அமமுக இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தொடர்ந்து பொய் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். Read More
Apr 1, 2019, 17:05 PM IST
திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். Read More
Apr 1, 2019, 15:03 PM IST
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரத்தின் அடிப்படையில் அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார். Read More
Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Apr 1, 2019, 13:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் ரூ 10 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 1, 2019, 12:55 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று காட்பாடியில் திமுக பிரமுகர் ஒருவரின் சிமென்ட் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10 கோடி பணம் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More