சென்னையில் பெண்ணை கொடூரமாக அடித்து கொன்று நகை கொள்ளையடிப்புஇருவரை போலீசார் கைது செய்தனர்

In Chennai, killed woman and looting jewelry

சென்னை திருவேற்காட்டில் பெண்ணைக் அடித்து கொன்று விட்டு நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவேற்காடு அருகே உள்ள மாதிராவேட்டையை சேர்ந்தவர் கோவலன். அவர் கடந்த 15ம் தேதி தனது மனைவி தனலெட்சுமியை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தனலெட்சுமியுடன் வேலை பார்க்கும் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதில் கூறி இருந்தார்.

இதனையடுத்து சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலையை குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கினர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தனர். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தனலட்சுமியை அவர்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டிட வேலை இருப்பதாகக் கூறி தனலெட்சுமியை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பின், தனலட்சுமியை தாக்கிவிட்டு ஒரு சவரன் நகையை எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடி செம்பரப்பாக்கம் ஏரி முட்புதரில் இருந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்ட போலீசார், ஏழுமலை, சக்கரவர்த்தியைக் கைது செய்தனர்.

You'r reading சென்னையில் பெண்ணை கொடூரமாக அடித்து கொன்று நகை கொள்ளையடிப்புஇருவரை போலீசார் கைது செய்தனர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டுல முடங்கிக் கிடக்காதீங்க! குஷ்பு ஆவேசப் பேட்டி!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்