கேபின் அழுத்தம்: விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை

ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்களில் சிலருக்கு மூக்கில் ரத்தம் சொட்டியது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிவில் விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயணம் செய்த 166 பேரில் 30 பேர் இந்த பாதிப்புக்கு உள்ளானதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் பிரச்சினை காரணமாக மீண்டும் ஜெய்ப்பூரிலையே தரை இறக்கப்பட்டது. இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

You'r reading கேபின் அழுத்தம்: விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்