பாலியல் புகாரில் நீதிபதி ராஜவேல் பணியிடை நீக்கம்

பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
 
சத்தியமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜவேலு, இளம்பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் இது குறித்து, ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிபதி மற்றும் முதன்மை அமர்வு நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், நீதிபதி ராஜவேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக கிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரின் நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பாலியல் புகாரில் நீதிபதி ராஜவேல் பணியிடை நீக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்