8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் – மன்சூர் அலிகான் அதிரடி

எட்டு வழிச்சாலை அமைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்

by Rekha, May 4, 2018, 19:25 PM IST

சேலம் மாவட்டம்,  கன்னங்குறிச்சியில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் வந்தார். அங்குள்ள மூக்கனேரிக்கு வந்த அவர் பரிசலில் சென்று ஏரியை பார்த்தார். அதன் பின்னர்,  அங்குள்ள ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவுள்ளார்.

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால்  எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன். என்று  நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களின் பேட்டியில் கூறியது, நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காணவே இங்கு வந்துள்ளேன். கன்னங்குறிச்சி உள்ள மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் – மன்சூர் அலிகான் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை