பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலி
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டியில் இருந்து 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் அங்கிருந்து 8 கி.மீ தொலைவுக்கு தீக் குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட சேதத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளிவரும் வெப்பம் 700 டிகிரி என்பதால் அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3100 பேர் வெளியேறி உள்ளனர். மேலும், எரிமலை சாம்பல் 15 கி.மீ வரை பரவலாம் எனவும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலி Originally posted on The Subeditor Tamil
More Akkam pakkam News
READ MORE ABOUT :