கொரானாவாவது.. ஒன்னாவது .. தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களைக் கட்டிப்போட்டு 250 பவுன் நகை கொள்ளை...!

சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் நூருல் யாக்கூப் , நேற்று மாலை இவர் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் கட்டிப் போட்டனர். பின்னர், வீட்டிலிருந்த 95 ஆயிரம் ரூபாய், 250 பவுன் தங்க நகைகள் மற்றும் காரை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த சில நாட்களாக யாக்கூபின் வீட்டில் தங்கியிருந்து வெளியேறிய அவரது உறவினர் மொய்தீன் என்பவரது கை வரிசையாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மொய்தீன் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தைச் சேர்ந்தவர்.இந்த கொள்ளை சம்பவத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்.யாகூப் குடும்பத்தில் இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருந்தனர். கொள்ளையர் கள் அதைக்கூட லட்சியம் செய்யாமல் கொள்ளை தான் முக்கியம் கொரானாவாவது ஒன்னாவது என்று சொல்லி அவர்களையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds